வடதமிழீழம்: கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இன்று உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.
இன்று காலையிலேயே துயிலுமில்ல ஏற்பாட்டு பணிகள் பூர்த்தியாகியிருந்த நிலையில், இன்று பகல் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் துயிலுமில்லத்திற்கு வந்ததை அவதானிக்க முடிந்தது. துயிலுமில்ல பணிகளில் இருந்தவர்களிடம் மாவீரர் தினம் உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆர்வமாக கேட்டறிந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.