கடுமையான உளவுத்துறை அச்சுறுத்தல் மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமாகவும் பேரெழுச்சியுடனும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தில் நிறைவடைந்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் நிகழ்வு ஆரம்பமாவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னர் மின்பிறப்பாக்கியை தீயிட்டுக் கொழுத்திவிட்டனர்.
உளவுத்துறையினரே இச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.
பருத்தித்துறை முனையில் நினைவேந்தல் நிறைவுற்றதும் ஒலிபெருக்கி சாதனங்களையும் அதனை ஏற்றி வந்த வாகனத்தையும் பொலிசார் பறித்துச் சென்றுள்ளனர்.