வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாதுகாப்பு அமைச்சு

breaking
நாட்டில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகள் ஆகியன பொலிஸாரினால் அகற்றப்படவுள்ளதான செய்தி பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், நடைபாதை கடைகள் எனபவற்றை அகற்றுவது தொடர்பாக எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் பொலிஸாரினால் அவ்வாறு எதுவும் அகற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.