ரொறன்ரோவில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

breaking
தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரொறன்ரோவில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு கார்த்திகை 27 ஆம் நாளான நேற்று (புதன்கிழமை) மலர்தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.