கடலில் காவியமான மாவீரர்கள்  முல்லைத்தீவு கடற்கரையில் நினைவு கூரப்பட்டனர்

breaking
  தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வு நேற்று (27) முல்லைத்தீவு கடற்கரையிலும் இடம்பெற்றது. கடலில் காவியமாகியவர்களும், ஏனைய மாவீரர்களும் நினைவுகூரப்பட்டனர். சரியாக மாலை 06.05மணிக்கு, மணிஓசை எழுப்பப்பட்டு, அகவணக்கம்இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர்களின் சகோதரர்களான சுதன், பீற்றர் இளஞசெழியன், மாவீரர் ஒருவரின் தாயாரான செபமாலை, மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆகியோர் பொதுச்சுடரை ஏற்றி வைத்தனர். சம நேரத்தில் ஏனைய மாவீரர்களின் பெற்றோர்களாலும், சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு உணர்வெளுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முல்லைத்தீவு வர்த்தக சங்கத்தினர் மற்றும் பெருந்திரளான மாவீரர்களினுடைய உறவினர்களும் பொது மக்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.