இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கை.!

breaking
இலங்கையில் கடந்த சில தினங்­க­ளாக தொடர்ச்­சி­யாக பெய்யும் மழை கார­ண­மாக மண்­ச­ரிவு ஏற்­படக் கூடிய வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­வ­தாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய களுத்­துறை மற்றும் காலி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னத்­தினால் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. களுத்­து­றையில் புளத்­சிங்­கள, வலல்­ல­விட்ட, மத்­து­கம மற்றும் அக­ல­வத்தை ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு இவ்வாறு  மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல காலி மாவட்­டத்தில் எல்­பிட்­டிய, நாகொட, இம­துவ மற்றும் பத்­தே­கம ஆகிய பிரதேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னம் தெரிவித்துள்ளது.