சுவிஸ் தூதரகத்தை முடித்த கையேடு கொத்துக்கடையில் அடித்த அதிகாரி?

breaking
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் முன் சத்தியாகிரகம் செய்து வந்த ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னா நேற்று இரவு அங்கிருந்து வெளியேறினார்.
இந்த உண்ணாவிரதத்திற்குப் பிறகு, உடனடியாக அருகில் உள்ள கொத்துரொட்டி கடைக்கு சென்று உண்ணும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளிவந்துள்ளது
கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரியை வாக்குமூலம் வழங்குமாறு கோரியே அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் , அதுரலியே ரத்தன தேரர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் விடுத்த கோரிக்கையை அடுத்து அவர் அந்த உண்ணாவிரதத்தை கைவிட்டதுடன் நேரடியாக அருகில் உள்ள கொத்து ரொட்டி கடைக்கு சென்றுள்ளார்.