தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு கட்சியின் செயலாளர் அல்லது பிரதிநிதியொருவர் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கலந்துரையாடலின்போது, தேர்தலுக்கான கட்டுப்பணம், பிரசார செலவுகள் மற்றும் தேர்தல் செலவு உள்ளிட்ட தேர்தல் விதிகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.