நிர்வாண வீடியோவை பேஸ்புக்கில் போட்டு அதிர வைத்த இளைஞர்.!

breaking
"நிர்வாணமாக இருக்கும் வீடியோவையும், குளிக்கும் வீடியோவையும் நான்தான் செல்போனில் அந்த பெண்ணை எடுத்து அனுப்புமாறு சொன்னேன்" என்று கைதாகி உள்ள இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. 19 வயதாகிறது. இவருடைய ஊரைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த பெண் சூலூர் அருகே தங்கி இருந்து ஒரு காலேஜில் 2-ம் வருடம் படித்து வருகிறார். இருவருமே ஒரே ஊர் என்பதால், சொந்த ஊரில் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள்.. இந்த நட்பு காதலாக மாறியது.. பிறகு தினமும் போனில் பேச ஆரம்பித்தனர்  வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்தும் பேசினர். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதால், நிர்வாண நிலையிலேயே செல்போனில் அந்த பெண் பேசியுள்ளதாக தெரிகிறது.. மேலும் கம்ப்யூட்டரில் வீடியோ கால் பேசினாலும் இப்படியே நிர்வாண நிலைதானாம். தன்னை நம்பி இந்த கோலத்தில் பேசிய பெண்ணின் வீடியோக்களை மொத்தமாக சேமித்து வைத்து கொண்டே வந்த அஜித், ஒரு கட்டத்தில், டிரஸ் இல்லாமலும், குளிக்கும் போதும் வீடியோ எடுத்து அனுப்ப சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். திடீரென எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது.. அவள் என்னுடன் பேசவே இல்லை.. போனையும் பிளாக் பண்ணிவிட்டாள். அதனால் நேரில் போய் பார்த்தேன்.. அப்போதும் என்னுடன் பேசவில்லை.. அதனால் ஆத்திரம் அதிகமாகி அவளை பழிவாங்க திட்டம் போட்டேன்.. அதற்கு பிறகுதான், அவளுடைய வீடியோக்களை அவளது சொந்தக்காரர்களுக்கே வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார்.