ஶ்ரீலங்கா இராணுவ சீருடைகள் வைத்திருந்த ஒருவர் கைது!

breaking
  ஶ்ரீலங்கா கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து வத்தல பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய சீருடை வைத்திருந்த ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர். தேசிய பாதுகாப்புக்காக இலங்கை கடற்படை மற்றும் இலங்கை காவல்துறையினர் மேற்கொள்கின்ற கூட்டு நடவடிக்கைகளின் போது வத்தலை பகுதியில் உள்ள சாலைத் தடுப்புக்கு அருகில் நிர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு பயணித்த சந்தேகத்திற்கிடமான லொறியொன்று கண்கானிக்கப்பட்டதுடன் குறித்த லொறி பரிசோதிக்கப்பட்டபோது, சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்திய சீருடைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்தபோது, அவர் தெளிவான விளக்கங்களை வழங்கத் தவறிவிட்டதுடன் சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் கூடலுஒய பகுதியில் வசிக்கும் 23 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் இச் சம்பவம் குறித்து வத்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.