தெற்காசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற குமார் சண்முகேஸ்வரன்

breaking
  13ஆவது தெற்காசியப் போட்டி விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகம் - ஹட்டனை சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கடும் குளிருக்கு மத்தியில் இன்று காலை நடைப்பெற்ற 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் குமார் சண்முகேஸ்வரன் கலந்துகொண்டார். பந்தயத் தூரத்தை 30 நிமிடம் 49.20 செக்கன்களில் ஓடி முடித்து அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதில் தங்கத்தை இந்தியாவும் (30,49,20), வெண்கலத்தை நேபாளமும் (30,50,06) வென்றிருந்தன. தான் பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டியிலேயே குமார் சண்முகேஸ்வரன் பதக்கம் வென்று சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.