வடதமிழீழம்: வட்டுக்கோட்டை அராலி கிழக்குப் பகுதியில் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குகதீசன் நிருஜன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்தார் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.