பிரியங்க பெர்ணான்டோவை பாதுகாக்கும் சவேந்திர சில்வா .?

breaking
 லண்டனில்   தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தி கொலைமிரட்டல் விடுத்த பேரினவாத அதிகாரி  பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இலங்கைக்கு இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என  இனப்படுகொலையாளி  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பிரியங்க பெர்ணாண்டோவுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ள அபராதம் தொடர்பாக எமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இலங்கை இராணுவம் மற்றும் வெளிவிவகார அமைச்சு இணைந்து இந்த விடயம் தொடர்பான தீர்மானங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது. அதற்கான நிதி சேகரிப்பதற்கு எந்தவித தேவைப்பாடுகளும் இல்லை. ஏனெனில் இதனை வெளிவிவகார அமைச்சு முன்னின்று செயற்படுத்தி வருகின்றது. அதேநேரம் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அதற்கு முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பையும் பெற்று நடைமுறைப்படுத்துவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.