ராகவா லாரன்ஸூக்கு சீமான் கேள்வி.?

breaking
தாம் பேசுவது எந்த நாட்டுக்கு நல்லது அல்ல என நடிகர் ராகவா லாரன்ஸுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய ராகவா லாரன்ஸ், சீமான் பேச்சுகள் நாட்டுக்கு நல்லது அல்ல என விமர்சித்தார் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் சீமானிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நான் என் நாட்டுக்காக பேசுகிறேன். தம்பி ராகவா லாரன்ஸ் எந்த நாட்டுக்காக பேசுகிறார் என கேள்வி எழுப்பினார். மேலும் சீமான் கூறுகையில், தெலுங்கானாவில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதை மக்கள் உணர்வோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பலாத்கார சம்பவங்கள் நிகழும் போது உடனடியாக தண்டனை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு வெங்காயத்தை மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை என்பது அவமானமாக உள்ளது என்றார்.