முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தடை

breaking
அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ரோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து தடகள போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.