சுவிஸ் தூதரக விவகாரம் கற்பனை நாடகமாம்.?

breaking
ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியினால் நடத்தப்பட்ட கற்பனை நாடகமே சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கடத்தல் சம்பவம் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேற்குலக நாடுகளுடன் புதிய ஜனாதிபதி, இராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கும்  செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக்கட்சி ஈடுபட்டு வருவதாகவும் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். அதாவது  சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் கூட இராஜதந்திர உறவுகளை சீரழிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக்கட்சியனால் மேற்கொள்ளப்பட்ட நாடகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.