கரும்புலி மேஜர் செழியன் உயிரோட்டம்.!

breaking
கரும்புலி மேஜர் செழியன் வீரவணக்க நாள் இன்றாகும் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது 11.12.1999 அன்று யாழ். மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற பெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் செழியன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இக்கரும்புலி வீரனின் உள்ளுணர்வின் வரிகள்…. தமிழீழம். என் இனிய மக்களே…. எமது மூதாதையர்களான பண்டாரவன்னியன், சங்கிலியன், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராடியும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில் தன்னும் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” இவ்வண்ணம், போராளி செழியன் [playlist type="video" ids="102813"] தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”