ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு அழைக்கப்பட்டுள்ள சிலர்!

breaking
இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளைய தினம் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் அழைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல் தெளிவானது அல்லவென சில பொறுப்பு வாய்ந்தவர்கள் கூறினாலும், அவை நம்பத்தகுந்த புலனாய்வு தகவல் என சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விஷேட நிபுணத்துவரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சிவழங்கியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஊடாக அந்தத் தாக்குலை தடுத்திருக்க வாய்ப்பு இருந்ததாக அவர் குறிபபிட்டுள்ளார். இந்நிலையிலேயே கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயத்தின் பிரதான பரிசோதகர், முகத்துவாரம் காவல்துறை நிலையத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட மேலும் சிலர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.