யாழில் இருந்து வவுனியா சென்ற இரண்டு இளைஞர்கள் கைது!

breaking
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த பேருந்தில் இருந்து இறங்கி சென்ற இரு இளைஞர்களையும், அவர்களது பொதிகளையும் சோதனை செய்த போது அவர்கள் அணிந்திருந்த சேட் பொக்கற்றுக்குள் கேரள கஞ்சாவினை இரு இளைஞர்களும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், உடமையில் இருந்த கஞ்சாவும் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா மது போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்