இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்! உடன் தொடர்பு கொள்க

breaking
தொலைபேசிக் கட்டணங்கள் முறையாக குறைக்கப்படாது இருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைபேசி பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கத்தினால் தொலைபேசிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் தத்தமது தொலைபேசி கட்டண பட்டியலில் குறைக்கப்பட்டுள்ளதா என்பதை பாவனையாளர்கள் கவனித்துக் கொள்ளுமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. பொதுவான தொலைபேசிக் கட்டணத்துக்கு 37.7 சதவீத வரி அறவிடப்பட்டது. இத் தொகை தற்போது 22.6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபன்கொட தெரிவித்துள்ளார்.