ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

breaking
  ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3ஆம் கட்டமாக 17ஆவது சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஜாா்க்கண்டில் ஏற்கெனவே, நவம்பா் 30 மற்றும் டிசம்பா் 7ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றுள்ளது. இன்று மூன்றாம் கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்ததாக எதிர்வரும் 16 மற்றும் 20 ஆம் திகதிகளில் 4 மற்றும் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 17 தொகுதிகளில் 32 பெண்கள் உட்பட 309 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 56,18,267 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். இதில் 26,80,205 போ் பெண்கள், 86 போ் திருநங்கைகள் ஆவா். மேலும் 16க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ள 9 தொகுதிகளில் இரட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தோ்தல் பணியில் 40 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனர். தோ்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் வாக்களிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநில தோ்தல் ஆணையம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.