வட தமிழீழம் , மானிப்பாய - சுதுமலை வடக்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ரவுடிக் கும்பல் அந்த வீட்டிலிருந்த பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதன்போது அவர்கள் வந்த இரு மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டுச் சென்ற நிலையில் அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (12) வியாழக்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றது.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்தபேரும் வீட்டை அடித்து உடைத்துவிட்டு திரும்பும் வழியில் பொலிஸார் வருகைதந்ததைக் கண்ட அவர்கள் மோட்டார் சைக்கிளைப் போட்டுவிட்டுத் தப்பியோடினர்.
யாழ். குடாநாட்டில் வாள்வெட்டுத் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.