ஓயாது ஓயாது போராட்டம் ஓயாது.!

breaking
வீரம் வீசும் எங்கள் மண்ணை
எண்ணும் எந்தன் நெஞ்சம்
தேசம் தமிழ்தேசம் அங்கே
ரத்தம் எங்கும் ரத்தம் நித்தம் செல்லும்
வான் பறவை கொட்டும்
குண்டுமழை என்உறவின்
வாழ்வியலைக் கொல்லுதே!
வெள்ளைச் சீருடையுடன்
பள்ளிக்குச் சென்ற பிள்ளைப்புறாக்கள்
சிங்களத்தைச் சீண்டியதா சொல்லடி
நாகர்கோவில் மண்ணிலே நாகரீகமின்றியே- உன்
நாடறியச் செய்ததுதான் என்னடி.
தத்தித்தத்திச் சென்ற தமிழ்ச்
சிட்டுக்களின் தேகங்கள்
வான் தழுவும் வேம்பின் கிளையில்
துண்டுகளாய்த் தொங்கியதைப் பார்த்தோமே …
ஆண்டவதேஞ்சமென்று
ஆலயத்துள் ஓடிச்சென்றும்..
உந்தன் கண்ணில் தப்பவில்லை நாமடி
நவாலி மண்ணிலன்று நரபலி ஏனெடுத்தாய்
ரத்த வெற்றி தானுக்கா சொல்லடி..?
தள்ளுவண்டி மீதில் தமிழ்ச்
சொந்தங்களைத் துண்டுகளாய்
அள்ளிச் சென்ற சோகங்களை
செந்நீர் சிந்தப் பார்த்தோமே
தாங்காது தாங்காது தமிழீழம் தாங்காது
ஓயாது ஓயாது போராட்டம் ஓயாது
வெளியீடு      :எரிமலை இதழ்