இல்லாத வாக்கு வங்கிக்காக அரச அதிகாரிகளை பந்தாடும் யாழ். மாவட்ட தேசியப்பட்டியல் எம்.பியான அங்...

breaking
  யாழ்.மாவட்டத்திலிருந்து அந்த அதிகாாியை இடமாற்றம் செய்யுங்கள், இந்த அதிகாாியை இடமாற்றம் செய்யுங்கள் என சிறீலங்கா சு.கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் தொடா்ச்சியாக தலையால் நடந்து வருகின்றாா். யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபா் யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராகவும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனா். அதேபோல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபா் அதிரடியாக பதவி நீக்கப்பட்டு அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றாா். இவற்றுக்கு காரணம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு அமைச்சா் என முன்னா் கூறப்பட்டது. எனினும் குறித்த அமைச்சா் இந்த விடயங்களில் தலையிடவில்லை. என்பதுடன், இந்த விடயங்களை கணக்கிலும் எடுக்கவில்லை. என உறுதிப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தோ்தலில் வெல்லாமல் தேசிய பட்டியலில் நா.உறுப்பினராக ஒருவா் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அரசாங்க அதிகாாிகள் மீது நடந்த அத்தனை அரசியல் பழிவாங்கல்களுக்கும் காரணம் என்பது தற் போது அம்பலமாகியிருப்பதுடன, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபா் என்.வேதநாயகனை கிளிநொச்சி மாவட்டம் தவிா்ந்த மற்றய 3 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு அல்லது அமைச்சுக்களுக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என தற்போது தலையால் நடந்து வருவதாக அரசாங்கத்தில் உள்ள சிலா் தகவல் கசியவிட்டுள்ளனா். இதேவேளை யாழ்.மாவட்ட அரசாங்க அதிகரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்வதுடன், யாழ்.மாவட்டத்திலுள்ள வெற்றிடத்திற்கு, அமைச்சு ஒன்றில் உள்ள மேலதிக செயலாளா் ஒருவரை கொண்டுவந்து யாழ்.மாவட்ட செயலாளா் ஆக்குவது அந்த நாடாளுமன்ற உறுப்பினாின் திட்டமாம். அதன் ஊடாக தோ்தல்காலத்தில் தமது உள்வீட்டு நலன்களை பாா்த்து இந்த முறையாவது தோ்தலில் வெல்லலாம் என்பது அவருடைய திட்டம் என்கிறது தகவல் அறிந்த வட்டாரங்கள்.