துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் மீட்பு.!

breaking
கருவலகஸ்வெவ பகுதியில் கைக்குண்டுகள் காவல் துறை  விஷேட அதிரடிப்படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கருவலகஸ்வெவ ஒல்லுக்குளிய பகுதியில் நேற்று காலை 11.15 மணியளவில் தனியார் ஒருவரின் வீட்டிற்கு பின்புறத்தை JCB இயந்திரத்தால் சுத்தம் செய்துக் கொண்டிருந்த வேலையில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றில் வெடிபொருட்கள்  காணப்பட்டதை அவதானித்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கருவலகஸ்வெவ காவல் துறைக்கு தகவலை வழங்கியுள்ளார். இதனையடுத்து அவ்விடத்திற்கு பொலிசார் சென்று பார்வையிட்டனர். இதன்போது அப்பொதியில் குண்டுகள் மற்றும் துப்பாக்கி காணப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர். SFG 87 வகை கைக்குண்டு ஒன்றும், K 400 வகை கைக்குண்டு ஒன்றும், N 75 வகை கைக்குண்டு 2 இரண்டும்,5.56 × 51 வெடிக்காத ரவைகள் இருபத்து ஒன்றும் T 56 மெகஸின் துப்பாக்கி ஒன்றும் இரண்டு பெர்லைட் குண்டுகளும் பொதியில் காணப்பட்டதாக காவல் துறையினர்  மேலும் தெரிவித்தனர். இதன்போது,  காவல் துறை புத்தளம் நீதிமன்றத்திற்கு தகவலை வழங்கியதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி புத்தளம் காவல் துறை விஷேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை 5 மணியளவில்  குறித்த பகுதியில் வைத்தே வெடிக்க வைக்கப்பட்டது. இதன் போது சந்தேகத்தின் பெயரில் எவரும் கைது செய்யப்படவில்லையென கருவலகஸ்வெவ காவல் துறையினர்  தெரிவித்தனர். இதன்போது T 56 வகை துப்பாக்கியை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.