வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் ஐவர் திருகோணமலையில் கைது

breaking
  திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனைகளின் போது ஐந்து பேர் வெவ்வேறு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும், கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவரும் மொத்தமாக ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 43 வயது உடையவர்கள் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.