கசிப்பு விற்றவரும், குடிக்க வந்தவர்களும் கைது!

breaking
  யாழ்.சுழிபுரம்- குடாவத்தை பகுதியில் வீடொன்றில் கசிப்பு காய்ச்சப்பட்டுவந்த நிலையில் இன்று மாலை குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்து ள்ளனர். இத்போது சந்தேகத்தின் பேரில் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். இதன்போது, வீட்டின் உரிமையாளரும் கசிப்பு அருந்துவதற்கு வந்திருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் இருந்து, 33 லீற்றர் 365 மில்லிலீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்மை குறிப்பிடத்தக்கது.