துருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 7 பேர் பலி

breaking
துருக்கிக்கு அகதிகளாக 71 பேரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள வான் என்ற ஏரியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். சம்பவ இடத்தில் ஐந்து பேரும், வைத்தியசாலையில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளார்கள். இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் மூலம் 64 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து துருக்கிக்கு அகதிகளாக வந்தவர்கள் என்று துருக்கி நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.