வடதமிழீழம்: பருத்தித்துறை முனை கடலில் நேற்று பிற்பகல் நீராடிக் கொண்டிருந்தவர் சுழியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த இராமசாமி மாணிக்கராசா (வயது-36) என்பவரே இவ்வாறு உயிழந்தார்.
இறுதிச் சடங்கு ஒன்றுக்கு சென்ற அவர் பருத்தித்துறை முனைக் கடலில் நீராடிய வேளை கடல் சுழியால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.