நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

breaking
  தேசிய கொள்ளை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து அந்த நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை கொழும்பு - காலி முகத்திடலில் அகில இலங்கை திட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி நியமனதாரிகளின் சங்கத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் தமது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது.