கோட்டாபய புறப்பட முன்னர் ஸ்ரீலங்கா வருகிறார் முக்கிய பிரமுகர்

breaking
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஸ்ரீலங்காவுக்கு வருகை தரவுள்ளார். அதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி வருகை தரவுள்ள அவர் 14 ஆம் திகதி நண்பகலில் ஸ்ரீலங்காவிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளார். அவர் 14 ஆம் திகதி காலை வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் 14 ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஸ்ரீலங்கா வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.