கைகுழந்தையை வாடகைக்கு எடுத்து, பிச்சை எடுத்து வந்த பெண்!

breaking
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து, வாடகைக்கு குழந்தை எடுத்து, பிச்சை எடுத்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுக்கு பின்பு, சாலையோரமாக பெண் ஒருவர் கைக்குழந்தை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதை பார்த்த ஆட்சியர், நேரடியாக சென்று அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த பெண் தான் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்தவர் என்றும், அங்கிருந்து குழந்தையை வாடகைக்கு எடுத்து வந்து பிச்சை எடுத்து வருவதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கைக்குழந்தையுடன் அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அரியூர் பகுதியிலுள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.