தமிழீழம் கிட்டு அண்ணா காட்டிய ஆதாரம்.!
செய்தியாளர் கூட்டமொன்றில் தளபதி கிட்டுவிடம் ஒரு நிருபர் கேட்டார்,
“இலங்கையில் நீங்கள் கேட்கும் தமிழீழப் பகுதிகள் எவை எவை என திட்டவட்டமாக ஆதாரத்துடன் கூற முடியுமா”?
ஒரு கண நேரம் கூட யோசிக்காமல் தளபதி கிட்டு உடனே கூறினார்,
“இலங்கையில் எந்தெந்தப் பகுதிகள் மீது சிங்கள விமானங்கள் வீசும் குண்டுகள் விழுந்திருக்கின்றனவோ
அந்தந்தப் பகுதிகளைக் கொண்டதே எமது தமிழீழம் என்றார்
கேட்டவர் உட்பட கூடியிருந்தோர் அனைவரும் கிட்டுவின் விடையை ரசித்துச் சிரித்தனர்
காவிய நாயகன் கிட்டு நூலிலிருந்து
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”