பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற பிரபாகரன்.!

breaking
பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு முதல் மூன்று பரிசுகளும், சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்தது. சரியாக காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த போட்டியில் மொத்தம் 676 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
விழாவின் முடிவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுயமார், மாவட்ட ஆட்சியர், காவல்துறை டிஜிபி, எஸ்பி ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் முதல் பரிசை சோழவந்தான் சட்ட மன்ற தொகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வீரர் களத்தில் 16 காளைகளை பிடித்து தட்டி சென்றார். அவருக்கு 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள மாருதி சுசுகி இக்னிஸ் கார் பரிசாக அளிக்கப்பட்டது.