வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலை அடுத்து குறித்த கும்பலை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் (15 ) ம் திகதி இரவு 8 மணி அளவில் இடம்பெற்றது.
படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.