திருகோணமலையில் இடம்பெற்ற விபத்து

breaking
தென் தமிழீழம் , திருகோணமலை – நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமை காரணமாகவே நேற்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.