டுபாயில் உயிரிழந்த இலங்கை பெண்!

breaking
டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (16) காலை அபுதாபியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து  ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 06 பேர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுள் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும், நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவரும் மற்றும் பாகிஸ்தான் நாட்டு சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த ஏனையவர்களின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. காயமடைந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.