அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்! குகைக்குள் காணப்பட்ட சடலங்கள்!

breaking
மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் காட்டுப்பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களால் சித்திரவதைக்கு உள்ளான மேலும் 14 பேரை விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பனாமா தலைநகர் பனாமா சிட்டியில் இருந்து சுமார் 155 மைல்கள் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் மத அடிப்படைவாத கும்பல் ஒன்று பேயோட்டும் பூசை மேற்கொண்டுள்ளது. இதில் பங்கேற்ற கிராம மக்களை தங்கள் பாவங்களில் இருந்து விடுவிப்பதாக குறிப்பிட்ட மத குருக்கள் குகை ஒன்றில் வைத்து அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். கிராம மக்களை அடித்து, சிலரை உயிருடன் நெருப்பில் தள்ளி, கூரான கத்தியால் தாக்கவும் செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் இருந்து தப்பிய 3 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த கோவில் ஒன்றில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணி பெண்ணொருவரின் 05 பிள்ளைகளும் அவரின் தந்தையும் அடங்குகின்றனர். விடுவிக்கப்பட்ட 14 பேரில் இருவர் கர்ப்பிணி பெண்கள் எனவும் பலருக்கும் ஆழமான காயங்கள் இருந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.