டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் உள்ளிட்ட இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று டுபாய் நகரிலிருந்து வருகைத்தந்த விமானமொன்றின் ஊடாக 323 சிகரெட்டுக்களை மேற்படி சந்தேக நபர்கள் கொண்டுவந்துள்ளதாக சுங்க திணைக்களத்தினர் குறிப்பிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதியானது சுமார் 38 இலட்சத்து 76 ஆயிரம் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 67 வயதுடைய கண்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் வசித்து வருபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது