ஆண் சிசுவை வீசி சென்ற மர்ம நபர்கள்!

breaking
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவில் இன்று மாலை 4.30 மணியளவில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆட்லி தோட்டத்தில் வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள புற்தரையில் சிசுவை வீசி சென்றுள்ளனர். அதனையடுத்து, அப்பகுதி வழியாக சென்ற பிரதேசவாசிகள் சிசுவை கண்டு டயகம பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.