சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுத்துள்ள கோரிக்கை!

breaking
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்க வேண்டும் என அனுராதபுரம் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொது மன்னிப்பின் கீழ் அல்லது பிணையில் விடுவிக்க வேண்டும் என அனுராதபுரம் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகருமான கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் இன்று அனுராதபுரம் நிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.