கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்தவருக்கு ஏற்பட்டநிலை

breaking
கொழும்பில் இருந்து பேருந்தில் மட்டக்களப்பிற்கு வந்த ஒருவரை நேற்று (21) அதிகாலை மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து 488 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று அதிகாலை ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த குறித்த பஸ்வண்டியை நிறுத்தி குறித்த நபரை விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்டபோது அவரிடமிருந்து குறித்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் 3 ம் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.