யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி பண்ணை கடற்கரையில் கழுத்தறுத்து கொலை..: , சிங்கள சிப்பாய் கைது

breaking
  யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போட்டப்பட்ட நிலையில் கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் சற்று முன்னர் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெ ற்றிருக்கின்றது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.