யாழ் பல்கலை மாணவிகளிடம் ராக்கிங்! சிக்கியது மேலதிக ஆதாரங்கள்!

breaking
யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்தில் புதுமுக மாணவிகளிடம் சிரேஸ்ட மாணவர்கள் சிலர் பகிடிவதை என்ற பெயரில் நிர்வாண புகைப்படம் கேட்டு அச்சுறுத்தியதால் குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து குறித்த மாணவியின் குடும்பம் அந்த மாணவிக்கு வந்த அனைத்து தொலைபேசி இலக்கங்களையும் ஊடகங்களிற்கு வழங்கியுள்ளதுடன், வட்ஸ்சப்பில் படம் கேட்ட ஸ்கிறீன்சொட்டையும் அனுப்புயுள்ளார். அந்நிலையில் குறித்த செய்தி பொய் என்று வழமையான பாணியில் மாணவர்கள் அறிக்கை விட்டிருந்தனர். அத்துடன் அங்கே கல்விகற்கும் சிங்கள மாணவருக்கு புலனாய்வுத்துறையுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி இந்த செய்தியை முகநூலில் எழுதிய பலருக்கு புலனாய்வுத்துறையினரை வைத்து தொலையேசியில் அழைப்பெடுத்து கொலைமிரட்டலும் விட்டுள்ளனர். அந்நிலையில் தற்போது ராக்கிங் நடந்ததாக கூறப்படும் வட்ஸ்சப் குழுவின் ஸ்கிறீன்சொட்களை பாதிக்கப்பட்ட மாணவி எமக்கு அனுப்பியுள்ளார். அதில் சிரேஸ்ட மாணவர்கள் புதுமுக மாணவர்களை மிரட்டுவது தெளிவாக தெரிகின்றது. அத்துடன் பகிடிவதை செய்தோரின் குரல்பதிவுகளும், வேறு சில ஸ்கிறீன்சொட்களும் எமது செய்திச்சேவைக்கு பாதிக்கப்பட்டோரால் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் தமது தவறை ஏற்று மன்னிப்புக்கேட்க வேண்டும். தொடர்ந்தும் சிங்கள புலனாய்வுத்துறையை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டும் வேலையை தொடர்ந்தால் அனைத்து ஆதாரங்களும் வெளிப்படுத்தப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்