ஜே.வி.பி யின் முதலைக்கண்ணீர் ?

breaking
தமிழர் தாயகத்தில்  சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என  இனவாத ஜேவிபி   பேரினவாத அரசாங்கத்திடம்  வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில்  நேற்று  (வியாழக்கிழமை) விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும், “போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகக் கூறி வடக்கில் முப்படையினர் மூலம் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட தமிழீழம் . வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பேருந்து முதல் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படும் இடங்கள் எங்கேயோ உள்ளன. போதைப்பொருள் பண்டாரகமவில் அகப்படும் போது வவுனியாவில் சோதனை செய்கின்றனர். தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே இதனைப் பார்ப்பார்கள்.