சீனாவுக்கு இலங்கை தூதரகம் முக்கிய கோரிக்கை

breaking
இலங்கைக்கு  திரும்ப சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் எவரும் விரும்புவார்களாயின் அவ்விடயம் தொடர்பாக அறிவிக்குமாறு பீஜீங்கிலுள்ள இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தங்கியிருந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள், இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக பீஜிங்கிலுள்ள சீனாவுக்கான பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவில் தங்கியிருக்கும் மாணவர்கள், சீன சுகாதார பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனா முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அத்தோடு 25 இற்கும்மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளமையால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.