தருமபுரத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் கைது!

breaking
  கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடுப்பகுதியில் இன்று அதிகாலை 2.00  மணியளவில் (09-02-2020) புதையல் தோண்ட முற்பட்டமை தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் ஒரு சிங்கள இராணுவ அதிகாரி  (லெப்.கேணல்)  உட்பட ஐந்து இராணுவத்தினர் 13 சிங்களவர்கள்  மூன்று தமிழர்கள் உட்பட 21 பேரை கைதுசெய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தும் பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த மூன்று வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைதுசெய்ப்பட்டவர்கள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டுவருகின்றன.