திடீரென தீப்பற்றி எரிந்த வீடு

breaking
உடப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிவாசல்பாடு தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட பிரதேசத்தில் ஓலை வீடு ஒன்று திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்த போதிலும் , வீடு முழுமையாக எரிந்துள்ளது.   குறித்த தீ விபத்து சம்பவத்தில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ள போதிலும், எதுவித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடு திடீரென தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.