‘2020’ டிஜிற்றல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாகப் பிரகடனம்!

breaking
2020ஆம் ஆண்டு டிஜிற்றல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக இலங்கை மத்திய வங்கியினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகள் உள்ளிட்ட ஏனைய நிதி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் டிஜிற்றல் முறையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு மக்களை பழக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் கையடக்கத் தொலைபேசி ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முறையை ஊக்கப்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிநுட்ப ரீதியாக நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல டிஜிற்றல் கொடுக்கல் வாங்கல் உதவியாக இருக்குமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.