காருக்குள் கைக்குண்டுடன் கையும் மெய்யுமாக பிடிப்பட்ட திருடர்கள்

breaking
  தம்பலகாமம் - கந்தளாய் பகுதியில் நேற்று பிற்பகல் கடையொன்றை திருட சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் திருட்டுக்காகப் பயன்படுத்திய வாடகை காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வாககமானது பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, காரினுள் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் மற்றும் திருடப் பயன்படுத்திய பல உபகரணங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட மேலதிக சோதனை நடவடிக்கைகளின் போது காரின் சில்லில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இவ்வாறு நாடு பூராவுமுள்ள பல கடைகளில் திருடி வந்துள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களை பல கடைகளுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளதாக மேலதிக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டனர்.